எழுத்தாளர் ஜெயமோகன் முதல் முறையாக ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் எழுதுகிறார்.
அறிமுக இயக்குநர் ஏழுமலை இப்படத்தை இயக்கவுள்ளார். படத்துக்கு மையல் என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.
சேதுப்பிள்ளை, அஞ்சு கிருஷ்ணா அசோக் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீ ராஜ்லட்சுமி பிலிம் லிமிடெட் நிறுவன தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஐகான் சினி கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.
இதுவரை திரைப்படங்களுக்காக கதையை மட்டுமே எழுதிவந்த எழுத்தாளர் ஜெயமோகன், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் எழுதுகிறார்.
இதனால் இவரின் ரசிகர்களிடையே பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply