தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாஜர்ஜுனாவின் 100வது படத்தை தமிழ் இயக்குநர் இயக்கவுள்ளார்.
தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும் அவ்வபோது நேரடியாகத் தமிழ் படங்களிலும் நாஜர்ஜுனா நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ரட்சகன் முதல் கார்த்தி உடனான தோழா வரை பல படங்கள் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. தற்போது நடிகர் தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்திலும் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் கூலி படத்திலும் நாகர்ஜுனா நடித்து வருகிறார். இந்த இரு படங்களும் தமிழில் நேரடியாக வெளியாகவுள்ளன.
இந்நிலையில், தற்போது மேலுமொரு தமிழ் இயக்குநர் படத்தில் நாகர்ஜுனா நடிக்கவுள்ளார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை இயக்கிய, ரா. கார்த்தி இயக்கத்தில் நாகர்ஜுனா நடிக்கவுள்ளார்.
இது அவரின் 100வது படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Leave a Reply