திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
சமீபத்தில் இளையராஜாவின் பேரன், திருவண்ணாமலையில் தனது முதல் இசைத்தொகுப்பை அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, இளையராஜாவும் திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலுக்குச் சென்ற இசைஞானி இளையராஜாவுக்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், மூலவர், உண்ணாமலை அம்மன், நவகிரகம் உள்ளிட்ட சன்னதிகளை தரிசனம் செய்தார். பின்னர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.
சமீபத்தில் லண்டனில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply